← Back to list

அழிவுக்கு எதிரான இனம்

அழகான நீர்நாய் இல்லாத உலகில் நீங்கள் வாழ்விங்களா? அதற்கான பதில் எனக்கு தெரியாது ஆனால் என்னால் அந்த உலகில் வாழ முடியாது.

Earthtranslated · 2026-01-13 15:13 · 25 claps · 2.0 min read
#otters #environment #extinction #food-chain #singapore
Open on Medium ↗
Wiki topics: 🍳 · Food & Cooking

By: Mahi P.

By: Mahi P.

அழிவுக்கு எதிரான இனம்

அழகான நீர்நாய் இல்லாத உலகில் நீங்கள் வாழ்விங்களா? அதற்கான பதில் எனக்கு தெரியாது ஆனால் என்னால் அந்த உலகில் வாழ முடியாது.

ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும்போது, ஒரு வகையான விலங்குகள் அழிவிற்க்கு நோக்கிச் செவ்கின்றன. அது மனதை வருத்துகிறாது. ஆனால் ஒரு வகையான நீர்நாய் அழிந்தால் அது உங்களையும் சுற்றுச்சூழலை எப்படி பாதிக்கப்படும்? அதற்கான பதிலைக் கண்டுபிடிக்க, நமக்கு உணவு வலையத்தை பற்றி ஒரு புரிதல் இருக்க வேண்டும்.

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் விவரித்தபடி, உணவு

வலை உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மற்றும் சிதைப்பவர்களுக்கு உள்ள இருக்கும் உறவுகள் காட்டும். முதலில் , தாவரங்கள் (உற்பத்தியாளர்) சூரிய ஒளியை பயன்படுத்தும் செயல்பாட்ட உணவை உற்பத்தி செய்கின்றன. இந்த தாவரங்களை உண்ணும் விலங்குகள் முதன்மை நுகர்வோர் என்று அழைக்கப்படுகின்றன. அவை பசுக்கள் மற்றும் நீர்நாய்களாக இருக்கலாம். முதன்மை நுகர்வோருக்குப் பிறகு,இரண்டாம் நிலை நுகர்வோர் உள்ளனர். ஒரு உணவு வலையத்தின் கடைசி நிலையில் சிதைப்பவர்கள் ஆகும். இந்த உயிரினங்கள் இறந்த பொருட்களை உடைத்து, அவற்றைச் சுற்றியுள்ள மண்ணில் ஊட்டச்சத்துக்களை வெளியிடுகின்றன.

இந்தியா மூன்று வகையான நீர்நாய் தாயகமாக உள்ளது, அவை மென்மையான பூசப்பட்ட நீர்நாய், யூரேசிய நீர்நாய் மற்றும் ஆசிய சிறிய நக நீர்நாய்.இந்த நீர்நாய்கள் அழிந்துவிட்டால், உணவு வலை மட்டுமெ பாதிக்கப்படாது.சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு அதிகப்படியான பாசிப் பூக்களை உருவாக்கி, நீரின் தரக் குறைவு, பல்லுயிர் இழப்பு மற்றும் சதுப்புநிலக் காடுகளுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.

நமக்கு இப்போது உணவு வலைகளைப் பற்றி ஒரு புரிதலை இருப்பதனால், அழிந்து வரும் உயிரினங்களுக்கு நாம் ஏன் அதிக கவனம் பார்க்களாம், மேலும் நீர்நாய்களின் அழிவு உங்களை எப்படி பாதிக்கப்படும் என்று கற்றுக்கொள்ளாம்.

தேசிய புவியியல் சங்கம் கூறியது போல், “ஒரு சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் பல உணவுச் சங்கிலிகளின் ஒரு பகுதியாகும்” என்பதுதான் பதில். ஒரு உணவுச் சங்கிலி சீர்குலைந்தால், பல சிக்கல்கள் வரும் என்று காலநிலை நிலைத்தன்மை டைரக்டரி கூறுகிறது.

  1. முதல் சிக்கல் உணவுக் கட்டமைப்பு தொடர் விளைவு (trophic cascade) ஆகும். ஒரு ஊட்ட நிலைத்தில் ஏற்படும் மாற்றம் மற்ற ஊட்ட நிலைகளிலும் தொடர் தாக்கங்களை ஏற்படுத்துகிறது; இது உணவுக் கட்டமைப்பின் பரஸ்பர சார்பையும் அதன் நுணுக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
  2. அடுத்த சிக்கல் பல்லுயிர் இழப்பு ஆகும். முக்கியமான இனங்கள் குறையும்போது அல்லது அழியும்போது, உருவாகும் சூழல் இடைவெளிகளை சில பொதுவான (generalist) இனங்கள் மட்டுமே நிரப்புகின்றன; இதனால் சூழலியல் பல்வகைமை குறைகிறது.
  3. இந்த சிக்கல்கள் சூழல் அமைப்பு நிலைத்தன்மையின்மைக்கு வழிவகுக்கும். செயல்பாட்டு குழுக்களின் இழப்பு அல்லது முக்கியமான தொடர்புகள் பலவீனமடைவதால், சூழல் அமைப்புகள் பாதிப்புகளைத் தாங்கும் திறனையும் மாற்றங்களிலிருந்து மீளும் திறனையும் இழக்கின்றன; மேலும் அழுகல், ஊட்டச்சத்து உறிஞ்சல் மற்றும் ஊட்டச்சத்து பரிமாற்றம் போன்ற செயல்முறைகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

நமக்குக் குறைவான உணவு கிடைக்கிறது. நிச்சயமாக, நாம் நீர்நாய்கள் உண்ண மட்டுமோம். இருப்பினும், அவை கரடிகள் மற்றும் ஓநாய்களுடிய உண்வு ஆகும், இந்த விலங்குகள் நமக்கு ரோமங்களின் மிகப்பெரிய ஆதாரமாகும். இது ஒவ்வொரு விலங்கும் மனிதர்களுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது, சுற்றுச்சூழலுக்கு உதவுவது நமது கடமையாகும். ஆனால் ஒரு தனி மனிதன் எவ்வாறு உதவ முடியும்? தேசிய வனவிலங்கு கூட்டமைப்பு நமது அன்றாட வாழ்க்கை முறையில் நாம் ஈடுபட பல முறைகளை பயன்படுத்த முடியும்!

  1. முதலில், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் வனவிலங்குகளை வேதியியல் ரீதியாக மாற்றுவதால் அவற்றின் பயன்பாட்டைக் குறைக்கவும். அதற்கு பதிலாக, உயிரியல் கட்டுப்பாடுகள் மற்றும் பயிர் சுழற்சி போன்ற நடைமுறைகளைப் பயன்படுத்தவும்.

  2. இரண்டாவது, மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம் மற்றும் மூங்கில் போன்ற நிலையான பொருட்களை மறுசுழற்சி செய்து வாங்கவும். மேலும், உங்கள் செல்போன்களை மறுசுழற்சி செய்யவும்.

  3. வனவிலங்குகளைத் துன்புறுத்துவது கொடூரமானது. இந்தச் செயலில் பங்கேற்க வேண்டாம், நீங்கள் அதைப் பார்த்தவுடன் எந்த உள்ளூர் அதிகாரிகளிடமும் புகாரளிக்கவும்.

  4. வனவிலங்கு வாழ்விடத்தைப் பாதுகாக்கவும். மரம் வெட்டுதல், எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடுதல், அதிகப்படியான மேய்ச்சல் மற்றும் மேம்பாடு அனைத்தும் வாழ்விடத்தின் விளைவாக வாழ்விட அழிவுக்கு வழிவகுக்கும்.

  5. சாலைகள் அல்லது எந்த நீர்நிலைகளிலும் குப்பைகளை வீச வேண்டாம்.

நீர்நாய்கள் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்கொள்ளும் பல உயிரினங்களில் ஒன்றாகும், மேலும் அவற்றின் மறைவு அவற்றின் இனங்களின் உயிர்வாழ்வை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலையும் அவை ஆற்றும் சுற்றுச்சூழல் பாத்திரங்களையும் கணிசமாக பாதிக்கும்.

நிச்சயமாக, நமது சுற்றுச்சூழலைக் கவனிப்பது நமது கடமை. ஒரு புத்திசாலித்தனமான உள்ளூர் மீனவர் ஒருமுறை என்னிடம் கூறினார், “ஒவ்வொருவரும் தங்கள் பங்கைச் செய்ய முடியும்,” நமது சுற்றுச்சூழலுக்கு உதவக்கூடிய நமது தனிப்பட்ட செயல்களைப் பொறுத்தது!


메타데이터
post_id
b20195b05ccf
slug
அழிவுக்கு-எதிரான-இனம்-b20195b05ccf
url
https://medium.com/@earthtranslated/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-b20195b05ccf
canonical_url
https://medium.com/@earthtranslated/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-b20195b05ccf
author_url
https://medium.com/@earthtranslated
status
ok
fetched_at
2026-07-13 10:27:06